சிறுவனிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட நபர் கைது

178 0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடா நாட்டில் கிராமத்தில் 10 வயது சிறுவனிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளைஞனுக்கு எதிராக சிறுவனின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் இளைஞரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.