வலி.வடக்கில் வீடுகளை இடித்தழிக்கும் இராணுவம்

622 0

article_1468393756-Houses-2யாழ். வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வளையத்தினுள் இருக்கும் பொதுமக்களின் வீடுகளை, இராணுவத்தினர் தொடர்ச்சியாக இடித்தழித்து வருகின்றனர்.

கட்டுவன் மற்றும் குரும்பசிட்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளே இராணுவத்தினரால் இடித்தழிக்கப்படுகின்றது. இவ்விரு கிராமங்களினதும் பகுதியளவு பிரதேசங்கள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விடுவிக்கப்படாத காணிகளில் உள்ள வீடுகளே இவ்வாறு இடித்தழிக்கப்படுகின்றது.

இவ்வாறு அழிக்கப்படும் வீடுகளில் இருக்கும் ஓடுகள், கூரை மரங்கள், சீமெந்துத் தூண்கள், கற்கள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவை, மறைவான ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இராணுவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.