மின்சார உற்பத்திக்கு தோரியத்தை பயன்படுத்த வேண்டும்- அணுசக்தி ஒழுங்குமுறை வாரிய தலைவர் கருத்து

371 0

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் அமைப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டது.

அணுசக்தித்துறையின் இரண்டாவது பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவான அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்த டாக்டர் விக்ரம் சாராபாயின் நிர்வாக உத்தரவின்படி 1971 ஏப்ரல் 30ந்தேதி கல்பாக்கம் அணு  ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. இது 1985 டிசம்பரில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இன்று நடைபெற்ற  இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் அமைப்பு தின விழாவில் சிறப்பு விருந்திராக மும்பையில் உள்ள அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் தலைவர் நாகேஸ்வரராவ் கலந்து கொண்டார்.
அணுப்புரம் நகர்ப்பகுதியில்  நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கதிர்வீச்சு கண்காணிப்பு அமைப்பை அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் பெருமளவில் உள்ள தோரியம் இருப்பை மின்சார உற்பத்திக்கு பயன்படுத்துவது முக்கியம் என்று குறிப்பிட்டார்.
அணு தொழில்நுட்பம் எதிர்கொள்ளும் சவால்களை சிறந்த தலைமை மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் வெற்றி கொள்வது அவசியம் என அவர் தெரிவித்தார்.
விழாவில் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.