ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹிட் கூறியுள்ளார்.ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் சமீபத்தில் இரண்டு இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. பார்க் மாகாண தலைநகர் மசார்-இ-ஷரிபில் இரண்டு வாகனங்களை குறிவைத்து அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், 9 பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் காயமடைந்தனர்.
ரம்ஜான் நோன்பு மாதத்தின்போது சிறுபான்மை சமூகங்களை குறிவைத்து கடந்த இரண்டு வாரங்களாக ஆப்கானிஸ்தான் முழுவதும் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்படுகிறது. இருப்பினும் இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காமல் இருந்தது.