தருமபுரம் நெத்தலி ஆற்றுப் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேக நபர்கள் மறைத்து எடுத்து சென்ற 40 லீற்றர் கசிப்பினை பொலிசார் மீட்டுள்ளதுடன் குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
இரவு சுற்றுக்காவலில் ஈடுபட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த இருவரையும் கைது செய்துள்ளதாக தருமபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

