பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

164 0

அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் குழுவினரை அப்புறப்படுத்துமாறு கோரி, கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.