சட்ட விரோத துப்பாக்கிகளுடன் மூவர் கைது

353 0

நாட்டின் சில பகுதிகளில் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்ட விரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இங்கினியாகல

மொனராகலை – இங்கினியாகல பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கல்ஓயபல்லம பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இங்கினியாகல பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அசலக்க

கண்டி – அசலக்க பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரித்த கைத்துப்பாக்கியுடன் , அசலக்க பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குடுகலயாய பிரதேசத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

46 வயதான மஹயாய உல்பத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகேபொல

இரத்தினபுரி – வெலிகேபொல பொலிஸ்பிரிவுக்குட்பட்ட அதகிரிகொட பிரதேசத்தில் 65 வயதான பலங்கொடை அதகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை  பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.