நாட்டின் சில பகுதிகளில் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்ட விரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இங்கினியாகல
மொனராகலை – இங்கினியாகல பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கல்ஓயபல்லம பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இங்கினியாகல பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அசலக்க
கண்டி – அசலக்க பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரித்த கைத்துப்பாக்கியுடன் , அசலக்க பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குடுகலயாய பிரதேசத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
46 வயதான மஹயாய உல்பத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகேபொல
இரத்தினபுரி – வெலிகேபொல பொலிஸ்பிரிவுக்குட்பட்ட அதகிரிகொட பிரதேசத்தில் 65 வயதான பலங்கொடை அதகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.