நாடளாவிய ரீதியில் இன்றும் (20) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இரண்டு முக்கிய வலயங்களில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இரண்டு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
குறித்த வலயங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை 01 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, P, Q, R, S, T, U, V , W ஆகிய வலயங்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இரண்டு மணி நேரமும் மாலை 05.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

