தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் செவ்வாயன்று : சுமந்திரன்

153 0

ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை எடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,

ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இதன்போது கூட்டமைப்பு இந்தப் பிரேரணைகள் தொடர்பில் எடுக்கவுள்ள தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி செய்யப்படவுள்ளது என்றார்

இதேவேளை, இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றபோதும் இந்த விடயம் சம்பந்தமாக இறுதி தீர்மானமொன்று எடுக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.