பருத்தித்துறை வீதியோரத்தில் கிடந்த சடலம்

287 0

யாழ்ப்பாணம் – பொன்னாலை, பருத்தித்துறை வீதியோரத்தில் நபர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொன்னாலை பருத்தித்துறை வீதியில் பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே  இனங்காணமுடியாத நிலையில் இவரின் சடலம் காயங்களுடன்  காணப்படுகின்றது.

சடலம் அருகே ஓர் மோட்டார் சைக்கிளும் காணப்படுவதனால் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மரணம் விபத்தா அல்லது சதி வேலையா என  இளவாலைப்  பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்