சட்டவிரோத மணல் அகழ்வு; அறுவர் கைது

172 0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 6 பேரும் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 4 டிப்பர்கள் மற்றும் 2 உழவு இயந்திரங்கள் ஆகியனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளான்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு நேற்று பொலிஸ் பிணை வழங்கப்பட்டதுடன், அவர்களை இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.