இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கொரோனா பாதிப்பு

174 0

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சில வாரங்களுக்கு முன் ராணி 2ம் எலிசபெத்தை சந்தித்து விட்டுத் திரும்பிய 2 நாளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு நாட்டு தலைவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார் என பக்கிங்காம் அரண்மனை இன்று உறுதிப்படுத்தி உள்ளது.
அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுகின்றன. வரும் வாரத்தில் அவர் வின்ட்சரில் தங்கியிருந்து பணிகளை செய்வார் என அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, ராணி 2ம் எலிசபெத் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மருத்துவ அறிவுரைகளை தொடர்ந்து பெறும் அவர், அனைத்து முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மனைவி கமிலாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது நினைவிருக்கலாம்.