இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 2300 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் தட்டுப்பாட்டால் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
இவ்வாறு வைக்கப்பட்டுள்ள பொருட்களில் அரிசி, பருப்பு, சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கியுள்ளதாக அச்சங்கத்தின் பேச்சாளரான நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.
பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை விரைவில் சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

