இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து இலங்கை மின்சார சபைக்கு போதிய எரிபொருளை பெற்றுக் கொடுக்காததன் விளைவாகவே ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்ந்து எரிபொருள் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கூறிய நிலையில், வியாழக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளரான ஆனந்த பாலித தெரிவித்தார்.
மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தவறியதால் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் வேண்டுமென்றே அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்க முயற்சிக்கின்றாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டீசல் மற்றும் உலை எண்ணெய் பற்றாக்குறை காரணமாக மின் நிலையங்கள் மூடப்பட்டதால் எரிபொருள் நெருக்கடி இருப்பது தெளிவாகிறது.
அன்று எரிசக்தி அமைச்சர் கூறியது போல் டீசல் இறக்குமதி இலங்கைக்கு வரவில்லை. எனவே இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

