விமான நிறுவன பணிப்பாளர் மற்றும் பொறியியலாளருக்கு விளக்கமறியல்

314 0

சிறிய ரக விமான அனர்த்தம் தொடர்பில் கைதான சக்குராய் விமான நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோரை ஜனவரி 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சக்குராய் நிறுவனத்துக்கு சொந்தமான சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று அண்மையில் கட்டான கிம்புலாப்பிட்டி பகுதியில் இயந்திர கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட வேளையில் விபத்துக்குள்ளானது.

இதனை அடுத்து சக்குராய் ஏவியேஷன் லிமிடட் நிறுவனத்தின் அனைத்து விமான சேவை நடவடிக்கைகளையும், உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த சிவில் விமான சேவைகள் அதிகாரசபை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.