எரி காயங்களுடன் யானை குட்டி சடலமாக மீட்பு

145 0

புத்தளம், தோனிகல காட்டுப் பகுதியில் காயங்களுக்கு உள்ளான நிலையில் நேற்றிரவு யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காட்டுப்பன்றிகளை வோட்டையாடுவதற்கு பூசனிக்காய்களில் வைக்கப்பட்ட பட்டாசை குறித்த யானைக் குட்டி அறியாது உற்கொண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த யானையினை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.