இந்தியாவில் இருந்து 500 பேருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி

186 0

இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 32 – 35 ஆசனங்கள் கொண்ட 500 பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக 2020 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதற்கமைய, பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக முற்கூட்டிய தகைமைகளைக் கொண்ட 03 நிறுவனங்களிடமிருந்து போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளது.

குறித்த விலைமுறிகளின் மதிப்பாய்வின் பின்னர் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய 32 ஆசனங்களைக் கொண்ட 500 பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியாவின் அசோக் லேலன்ட் கம்பனிக்கு வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இந்தியாவில் இருந்து 500 பேருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]