கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர் களின் தரவுகளை மீளாய்வு செய்ததன் பின்னர் தேவைப்பட்டால் நான்காவது தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் மேலதிக நட வடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்னமும் மூன்றாவது தடுப்பூசியை உரிய முறையில் மக்கள் பெற்றுக் கொள்ளவில்லை. மூன்றாவது தடுப்பூசியைப் பெற்ற வர்களுக்குச் சிறிய கால அவகாசம் தேவைப்படுகின்றது.
அதன் பின்னர் நான்காவது தடுப்பூசி குறித்துச் சிந்திக்க வேண் டும். எனினும் தரவுகள் மீளாய்வு செய்த பின்னர் நான்காவது தடுப்பூசி வழங்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

