பாபநாசம் அணையில் முதலை நடமாட்டம் – சமூக வலைதளங்களில் பரவும் காட்சியால் பரபரப்பு

195 0

பாபநாசம் அணையில் முதலை நடமாட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் காட்சியால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையாக பாபநாசம் அணை உள்ளது. இந்த அணையில் முதலைகள் கிடப்பதாக கூறப்படுகிறது. அணையில் கிடக்கும் முதலைகள் அவ்வப்போது வெளியில் வந்து அணையின் கரையோரங்களில் கிடப்பதை சுற்றுலா பயணிகள் பலர் பார்த்து உள்ளனர்.
குறிப்பாக கோடை காலங்களில் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்து காணப்படும் போது, முதலை தண்ணீரில் கிடப்பதையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். மேலும் அணையின் பாதுகாப்பு பணியில் தினமும் ஆயுதப்படை போலீசார், மின்வாரியத்தினர் ஈடுபட்டும் வருகிறார்கள்.