முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் சோதனை

173 0

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனைகள் நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் சோதனை நடைபெறுகிறது.

முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 69 இடங்களில் கடந்த 15-ந்தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத சுமார் 2 கோடி ரூபாய், தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் இன்று மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கலில் 10 இடங்களிலும், ஈரோட்டில் 3 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.