ராமேஸ்வரம்-இலங்கை இடையிலான குறுகிய கடல் பகுதியில் தவறுதலாக எல்லை தாண்டுவது இயல்பானது. இது இரு தரப்பிலும் நடக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும்.
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை கைது செய்த சிங்களக் கடற்படை அவர்கள் பயன்படுத்திய 6 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
அண்மைக் காலங்களில் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 42 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமேஸ்வரம் -இலங்கை இடையிலான குறுகிய கடல் பகுதியில் தவறுதலாக எல்லை தாண்டுவது இயல்பானது. இது இரு தரப்பிலும் நடக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

