மாமனாரை கொலை செய்த குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தர் கைது!

275 0

களுத்துறை,கொஹொலான ஹெட்டிகொட பிரதேசத்தில் மாமனாரை தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்குமிடையில் நீண்ட நாட்களாக இருந்த தகராறு நேற்று(04) கைகலப்பாக மாறியதில், சந்தேகநபர் தனது மாாமனாரை தாக்கியுள்ளார்.

இதனையடுத்து 72 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடரபில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.