மது அருந்திவிட்டு குடும்பஸ்தரை தாக்கிய நால்வர்

314 0

மல்லாவி – அனிஞ்சியங்குள்ம் 2ஆம் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால் நின்று  மது அருந்திவிட்டு  வீட்டின் குடும்பஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில்  நான்கு இளைஞர்கள் மல்லாவி பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளனர்

இவர்களின்  தாக்குதலில் படுகாயமடைந்த  இரு பிள்ளைகளின் தந்தையான  சிவலிங்கம் யோகேந்திரராசா (வயது 33) என்பவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மல்லாவி பகுதியைச்சேர்ந்தவர்களாவர்.

மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர