மல்லாவி – அனிஞ்சியங்குள்ம் 2ஆம் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால் நின்று மது அருந்திவிட்டு வீட்டின் குடும்பஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் மல்லாவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இவர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இரு பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் யோகேந்திரராசா (வயது 33) என்பவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மல்லாவி பகுதியைச்சேர்ந்தவர்களாவர்.
மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர

