சுவிசில் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு!

404 0

002தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ண் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவித்தலுடன், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட வேளையில் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; வழங்கப்பட்டன.

நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப்பாடல்கள்;, சிறப்பு நடனம், பேச்சுக்களுடன் கவியரங்கமும் இடம்பெற்றதுடன் நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன்; நிறைவுபெற்றன.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சிய பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த அவரது நினைவுநாளான 26.09.2016 திங்கட்கிழமை அன்று ஐ.நா நோக்கி மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க ஆயத்தமாகுமாறு அனைத்து தமிழ் உறவுகளையும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அன்புரிமையோடு இத்தருணத்தில் வேண்டி நிற்கின்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

001   004 005 006 007 008 009