நாமல், கோதபாய நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜர்

603 0

Gotabaya-and-Namal-FCID-660x330பாராளுமன்ற உறப்பினர் நாமல் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோர் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் முன்னிலையில் இன்றைய தினம் ஆஜராகியுள்ளனர்.70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் நாமல் ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் நாமல் ராஜபக்ஸவிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்து கொள்ள உள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தின் அடிப்படையில் இன்றையதினம் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்படலாம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மோசடி சம்பவம் தொடர்பில் கோதபாய ராஜபக்ஸவிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.