மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

215 0

மட்டக்களப்பு சந்திவெளியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.

செங்கலடி பிரதேசத்தில் இருந்து வாழைச்சேனை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியுடன் எதிரே வந்த கென்ரர் ரக வாகனம் நேருக்கு நேர் மோதியதனால் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது கறுவாக்கேணியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான து.விஜயநாதன் (வயது 51) என்பவரே உயிரிழந்துள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.