முதலாம் திகதி முதல் சகல பேருந்து சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும்!

171 0

மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடை எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்தப்பட்டதன் பின்னர், உரிய நேர அட்டவணைக்கு அமைய சகல பேருந்து சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கொவிட்-19 பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த தனியார் பேருந்து சேவைகளை மீளஆரம்பிப்பதற்காக, பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கக்கூடிய, அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்துடன், போக்குவரத்து அமைச்சில் இன்று(28) இடம்பெற்ற கலந்துரையாடலில், போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.