புகையிலையை பதுக்கி வைத்த இருவர் கைது

188 0

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் சிம் அட்டை மற்றும் புகையிலை அடங்கிய பொதியை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இரு கைதிகளைப் விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளனர்

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே சிம் அட்டை மற்றும் புகையிலை என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபரின் சட்டையின் இடது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சிம் அட்டை கைப்பற்றப்பட்டுள்ளது.