தடம் மாறும் தமிழ் தேசியம்?

419 0

2தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்’ எனும் தொனிப்பொருளின் கீழ், மன்னார் பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக, மன்னார் பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டிற்கு பின்னர், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் எனும் நோக்கிற்கு அமைவாக, குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இக் கலந்துரையாடல், எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மன்னார் ஞானோதயம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இக் கலந்துரையாடலுக்கு, தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் வடமாகாண முதலமைச்சர், வடக்கு கிழக்கு ஆயர்கள், மதகுருமார்கள், பேராசிரியர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பத்திரிகை ஆசிரியர்கள், பத்தி எழுத்தாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.