தமிழ்க் கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான முன்சன் தமிழாலயத்தில் 11 மாணவர்கள் புதிதாக இணைந்து கொண்டனர்.

1045 0

17.10.2021 அன்று தமிழ்க் கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான முன்சன் தமிழாலயத்தில் 11 மாணவர்கள் புதிதாக இணைந்து கொண்டனர். எமது சிறார்களின் தாய் மொழி முன்னேற்றம் கருதி நடைபெற்ற இந் நிகழ்வில் எமது பழைய மாணவர்களின் பிள்ளைகளும், ஏனைய பெற்றோர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். பள்ளி உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்கள் பொதி செய்யப்பட்ட பையை வழங்கியதுடன் அவர்களுக்கான மழலையர் நிலை பாடநூலும் ஆசிரியர்களால் வழங்கப்பட்டது.