தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 81 பேர் கைது

141 0

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 81 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

2020 ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக மொத்தம் 80,790 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.