தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து கவர்னரிடம் விளக்கி கூறி ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று தர மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்
தமிழ்நாட்டில் நீட் தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு தேசிய அளவில் நடத்தப்படுவதால் தமிழக கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு எட்டாக்கனியாகி விடுவதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.