அ.தி.மு.க.வில் இருந்து வேதாரண்யம் முன்னாள் எம்.எல்.ஏ. என்.வி.காமராஜ் நீக்கம்

436 0

201607050939016571_Tamil-Nadu-across-ADMK-Womens-Team-meeting-Jayalalithaa_SECVPFவேதாரண்யம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. என்.வி.காமராஜ். இவர் வேதாரண்யம் நகரச் செயலாளராகவும் இருந்தார்.இவருக்கு இந்த சட்டசபை தேர்தலின்போது போட்டியிட “சீட்” கிடைக்கவில்லை.இந்த தொகுதியில் மாவட்டச் செயலாளர் ஓ.எஸ்.மணியன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று அமைச்சராகி விட்டார்.
தேர்தலின்போது என். வி.காமராஜ் சரிவர கட்சி பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பல்வேறு புகார்களும் கட்சி தலைமைக்கு சென்றது.இதனால் என்.வி.காமராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இப்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு வருமாறு:-

கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த என்.வி.காமராஜ் (வேதாரண்யம் நகரக் கழகச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறி உள்ளார்.வேதாரண்யம் நகர கழகச் செயலாளர் பொறுப்பில் எஸ்.எம்.எழிலரசன் (முன்னாள் நகரச் செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.