’பிசிஆர் சோதனையை மீண்டும் தொடங்க வேண்டும்

332 0
கொரோனா தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் அதற்கு ஒரு தற்காலிக ஓய்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார நிபுணர்களின் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.வரும் ஜனவரி மாதத்துக்குள் ஒரு புதிய அலை உருவாகவுள்ளதாகவும் அது அதிக ஆபத்தாக இருக்கும் எனவும் கூறினார்.

சில சுகாதார அதிகாரிகள் பலவந்தமாக பிசிஆர் சோதனைகளை நிறுத்தி, வலுக்கட்டாயமாக கொரோனா அலைகளை உருவாக்கினர் என்றார்.

நாடு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால்,   அனைவரும் மிகவும் முறையான முறையில் செயற்பட்டால் மட்டுமே, புதிய அலை திரும்புவதை தடுக்க முடியும். இதன் முதல்கட்டமாக, இடைநிறுத்தப்பட்ட பிசிஆர் சோதனை செயல்முறையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றார்.