கோதுமை மாவின் விலை அதிகரிப்பை அடுத்து, பேக்கரி உற்பத்தி பொருள்களின் விலை அதிகரிப்பு குறித்து, இன்று பிற்பகல், கலந்துரையாடப்பட உள்ளதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் பாண் ஒன்றின் விலையை 5 ரூபாயால் அதிகரிப்பது தொடர்பிலும் ஏனைய பேக்கரி பொருள்களின் விலை அதிகரிப்பு தொடர்பிலும், இதன்போது கலந்துரையாடப்படும்.
நுகர்வோரை பாதிக்காத வகையில் இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனவும், அச்சங்கம் கூறியுள்ளது.