அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகை இன்று இலங்கைக்கு

227 0

அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது அரிசி தொகை இன்று (11) இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலவும் அரிசி பற்றாக்குறையை நிறைவு செய்யும் விதமாக அரசியை இறக்குமதி செய்ய அண்மையில் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் ஒரு கிலோ அரிசியை 100 ரூபாவிற்கு மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.