அமெரிக்காவுடன் கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தை வழங்க உடன்படிக்கை எதுவும் கைச்சாத்திடப்படவில்லை – ஜீ.எல்.பீரிஸ்

228 0

கெவரலப்பிட்டிய யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்காக இதுவரை எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கெரகலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பங்கை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கெவரலப்பிட்டிய யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்கு அமெரிக்க நிறுவனம்  ஒன்றுக்கு வழங்குவது தொடர்பாக இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால் அது தொடர்பில் இரு தரப்பிக்கிடையில் கலந்துரையாடல் இடம் பெற்று வருவதாகவே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பாக அனைத்து தரப்பினரதும் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு நாட்டுக்கு பொருத்தமான, ஆரோக்கியமான தீர்மானத்தையே அரசாங்கம் இறுதியில் முன்னெடுக்கும்.

அத்துடன் இந்திய வெளிவிவகார செயலாளர் கடந்த வாரம்  உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாட்டுக்கு  வந்து சென்று விட்டார். அவரின் விஜயம் தொடர்பாக பல்வேறு பொய் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன.