கிளிநொச்சியில் நடைபெற்ற மாலதியின் 34 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

219 0

முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.நினைவேந்தலை தடுக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயத்திற்கு முன்பாக இராணுவத்தினரும் காவற்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினரால் நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயம் அமைந்திருக்கும் வீதியின் நுழைவாயிலில் இராணுவத்தடை அமைத்து அவ்வீதியால் செல்பவர்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்தினர்