அமெரிக்காவை பழிவாங்கியே தீருவேன் – பின்லேடன் மகன்

327 0

201607101602260066_Bin-Ladens-son-threatens-revenge-for-fathers-assassination_SECVPFஅல் கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனை கொன்றதற்காக அமெரிக்காவை பழிவாங்கியே தீருவேன் என அவரது மகன் சபதமேற்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த ரகசிய தாக்குதலை அமெரிக்காவைச் சேர்ந்த ‘நேவி சீல்’ என்கிற சிறப்புப்படை மேற்கொண்டது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட ஒசாமாவின் பிரேதத்தை கடலில் புதைத்து விட்டதாக அமெரிக்க அரசு அறிவித்தது.

இந்நிலையில், தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்துள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஹம்ஸா பின்லேடன் இந்த வீடியோவில் தோன்றி பேசுகையில், நாங்கள் எல்லோருமே ஒசாமாதான். பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், ஏமன், சோமாலியா மற்றும் உங்களது (அமெரிக்கா) சித்தாந்தத்தை ஏற்கமறுக்கும் இதர முஸ்லிம் நாடுகள்மீது நீங்கள் செலுத்திவரும் அடக்குமுறைக்காக உங்களை (அமெரிக்க மக்கள்) அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் தாக்குதல் நடத்தி பேரழிவை உண்டாக்குவோம்.

இது, ஒசாமா என்ற தனிமனிதருக்காக நடத்தப்படும் தாக்குதல் அல்ல, இஸ்லாமை பாதுகாக்க நினைத்து உயிர்நீத்த அனைவரின் சார்பிலும் பழிவாங்கும் நடவடிக்கையாகும் என குறிப்பிட்டுள்ளான்.