உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான 97 குடும்பங்களுக்கு சொந்தக் காணி இல்லை!

349 0

Poonthottam_Refugee1யுத்தத்தினால் உள்ளக இடப்பெயர்வுகளுக்குள்ளாக்கப்பட்டு பூந்தோட்ட முகாமில் வசித்துவரும் 97 குடும்பங்களுக்கு சொந்தக் காணிகள் இல்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.

இவர்களுக்கு வவுனியா – புளியங்குளம் காட்டுப்பகுதியில் 40 ஏக்கர் காணி 31 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே காணிகளற்ற 66 குடும்பங்களுக்கு வவுனியா சின்னடம்பன் பிரதேசத்தில் 60 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு அங்கு வீடமைக்கும் பணிகள் நிறைவுற்று வருகின்றது என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான 971 குடும்பங்கள் தற்போது முகாம்களில் வசித்து வருவதாகவும், சுமார் 12 ஆயிரத்து 505 குடும்பங்கள் வடக்கு கிழக்கில் இதுவரை மீளககுடியேற்றப்பட்டுள்ள தாகவும், தற்போதைய அரசாங்கம் 3,136 குடும்பங்களை குடியேற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.