முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இலங்கைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பும் சந்தர்ப்பத்தில், வெளிவிவகார அமைச்சு அல்லது சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் கீழ் பதிவினை மேற்கொள்ளத் தேவையில்லை என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.