Bremen நகர மத்தியில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற தியாகதீபம் திலீபன் அவர்களது நினைவுநாள் நிகழ்வு.

253 0

தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது 34 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வும் கவனயீர்ப்பு நிகழ்வும் நேற்றையதினம் பிறேமன் (Bremen) நகர மத்தியில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. தியாகதீபம் திலீபன் அவர்களது உருவப்படத்துக்கு திரு. கஜன் அவர்கள் மலர்மாலை அணிவிக்க ஈகைச்சுடரினை திருமதி கோகுலசிங்கம் கலைவாணி அவர்கள் ஏற்றி வைத்து ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து பிறேமன் நகர இளையவர்கள் வேற்றின மக்களுக்கான பரப்புரை நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியாக ஒழுங்குபடுத்தி முன்னெடுத்திருந்தார்கள். நிறைவாக தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது இலட்சியக் கனவை நிறைவேற்ற தொடர்ந்தும் அரசியல்பணி ஆற்றுவோம் என இளையவர்கள் உறுதி எடுத்துக்கொண்டு தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது 34 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வினையும் கவனயீர்ப்பு நிகழ்வினையும் நிறைவு செய்தனர்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திர தமிழீழம் மலரட்டும்”