பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியர்களும் இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இந்தப் பணிபுறக்கணிப்புப் போராட்டம் இடம்பெற்றது.
6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டடம் மேற்கொள்ளப்பட்டது.
ஆயினும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்தவர்களுக்கு இடையூறு எதுவும் இன்றியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

