நாட்டை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார்- இராணுவத் தளபதி

145 0

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை, ஒக்டோபர் முதலாம் திகதி தளர்த்தி, நாட்டைத் திறப்பதற்கான திட்டங்களை உடன் வகுக்குமாறு  கோட்டாபய ராஜபக்ச இராணுவத் தளபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்தத் தகவலை இராணுவத் தளபதி இன்று ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவின் பிரகாரம் இதற்கான வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர், அரச ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் விதம் குறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெறுகின்றது.