பாமரர்களையும் நாளிதழ் படிக்கச்செய்து உலக நடப்புகளை அறியச் செய்த பெருமை சி.பா.ஆதித்தனாரையே சாரும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
தமிழர் தந்தை என்று போற்றப்படும் சி.பா. ஆதித்தனாரின் 117-வது பிறந்தநாளில் அவரை வணங்குவோம். அவர் இல்லாமல் தமிழ்நாட்டு இதழியல் இல்லை. தமிழர்களுக்கான உரிமைகள் இல்லை. பாமரர்களையும் நாளிதழ் படிக்கச் செய்து உலக நடப்புகளை அறியச் செய்த பெருமை அவரையே சாரும்.
பா.ம.க. இளைஞரணி செயலாளர் அன்புமணி:
தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 117-வது நாள் பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. உலகம் போற்றும் சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவரை நாமும் போற்றுவோம். இதழியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் இனிவரும் பல தலைமுறைகளுக்கு பாடமாக விளங்கும்.
அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் :-
“பத்திரிகை உலகின் பிதாமகன்” சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்த நாளில் வணங்குகிறது தமிழ் கூறும் நல்லுகம். கை நாட்டு மனிதனுக்கும், கடைக்கோடி மக்களுக்கும் எளிய தமிழைக் கொண்டு சென்ற சி.பா.ஆதித்தனாரை வணங்குவதில் பெருமை கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.