அரசுக்கு மதுக்கடைகளைத் திறப்பதிலுள்ள அவசரம் பாடசாலைகளைத் திறப்பதில் இல்லை- உலபனே சுமங்கல தேரர்

155 0

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள முரண் பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்காகத் தொடங்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டம் அரசாங்கத்தின் அழுத்தத்தின் மத்தியிலும் நியாயமான தீர்வின்றி கைவிடப்படாது என்று கல்வி நிபுணர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் இன்னும் அரசாங்க ஆதரவாளர்களால் பல்வேறு அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு மதுக்கடைகளைத் திறப்பதிலிருக்கும் அவசரம் பாடசாலைகளை திறப்பதில் இல்லை என்பது வருத்தமான செய லாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.