குளத்திலிருந்து இளைஞர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன!

166 0
வட்டவளை, லொனாட் பாற்பண்ணைக்கு அருகில் இருக்கும் குளத்திலிருந்து இளைஞர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை நீராட சென்றிருந்த இருவருமே இவ்வாறு இன்றுக்காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

முதலாவது சடலம் காலை 6.10க்கும் இரண்டாவது சடலம் 7 மணிக்கும் மீட்கப்பட்டுள்ளது.

இருவரில் ஒருவர் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றையவர் வட்டவளை லொனாட் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்த வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்​கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.

சிலாபம் பகுதியை சேர்ந்த 21 வயது மதிக்கதக்க சஜிந்த தில்சான் என்பவரும் லொனாட் பகுதியை சேர்ந்த 41 வயது மதிக்க தக்க இரண்டு பிள்ளைகளின் தந்தையமான சின்னையா ராஜா என்பவருமே இவ்வாறு   சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.