79 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

185 0

இலங்கை கடற்படையினர் நேற்றைய தினம் தலைமன்னார், கடற்கரைப் பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின்போது சுமார் 9.914 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நால்வரை கைதுசெய்த இலங்கை கடற்படையினர், அவர்கள் பயன்படுத்திய படகொன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 79 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கைதானவர்கள் 28 முதல் 37 வயதுடைய தலைமன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் டிங்கு படகுகள் என்பவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்றியே கடற்படையினரின் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.