தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 637 பேர் கைது

222 0

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 72,000 க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் மேலும் 637 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 18 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுததல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 72,113 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் 790 வாகனங்களில் பயணித்த 1,162 நபர்கள் மேல் மாகாணத்திற்குள் நுழைந்துள்ளனர். அதேநேரம் 596 வாகங்களில் பயணித்த 892 நபர்கள் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுயும் உள்ளனர்.