பிரபல போதைப்பொருள் வர்த்தகரான அமில பிரசன்ன எனும் சன்சைன் சுத்தாவின் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிதிகம, அஹங்கம பகுதியை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை இன்று (14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.